search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நெல்லையப்பர் கோவில் யானை"

    • நெல்லையப்பர் கோவில் காந்திமதி யானைக்கு 52 வயது ஆகிறது.
    • கோவில் வளாகத்தில் யானை குளிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள நீச்சல் குளத்தையும் வன பாதுகாவலர் பார்வையிட்டார்.

    நெல்லை:

    நெல்லையப்பர் கோவிலில் காந்திமதி என்ற பெயரில் பெண் யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த யானைக்கு 52 வயது ஆகிறது. இந்த யானை உடல் எடை அதிகரிப்பால் நடைபயிற்சி அளிக்கப்பட்டு உடல் எடை குறைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் யானை பாதங்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க பக்தர்கள் சார்பில் காலணிகளும் தயாரித்து வழங்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் நெல்லை உதவி வன பாதுகாவலர் ஹேமலதா நேற்று மாலை நெல்லையப்பர் கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு முக கவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியை தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து காந்திமதி யானையை நேரில் பார்வையிட்டார். பின்னர் யானைக்கு வழங்கப்படும் உணவு வகைகள், தற்போது பக்தர்களால் வழங்கப்பட்ட காலணி ஆகியவை குறித்து கேட்டறிந்தார்.

    மேலும் கோவில் வளாகத்தில் யானை குளிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள நீச்சல்குளத்தையும் அவர் பார்வையிட்டார். அதை தொடர்ந்து யானையை நல்லமுறையில் பராமரிக்கும்படி பாகன்களுக்கு ஆலோசனைகள் வழங்கிச்சென்றார்.

    • 52 வயதான காந்திமதி யானை தற்போது மூட்டு வலியால் அவதிப்பட்டு வருகிறது.
    • காலணிகள் யானையின் கால்களில் பொருத்தி பயிற்சி அளிக்கப்படும்.

    நெல்லை:

    நெல்லையப்பர் கோவிலில் 'காந்திமதி' என்ற பெண் யானை வளர்க்கப்பட்டு வருகிறது.

    நெல்லையப்பர் கோவிலின் ஆனித்திருவிழா உள்பட பல்வேறு திருவிழாக்களில் சுவாமி வீதிஉலாவின் போது காந்திமதி யானை முன் செல்வதோடு பக்தர்களுக்கு ஆசியும் வழங்கி வருகிறது.

    இந்நிலையில் 52 வயதான காந்திமதி யானை தற்போது மூட்டு வலியால் அவதிப்பட்டு வருகிறது. இதனால் சப்பர வீதி உலாவில் சேதமான சாலையில் செல்லும்போது பாதம் பாதிப்படைகிறது.

    இதனையறிந்த சிவனடியார்கள் யானையின் மூட்டு வலியை குறைக்கவும், பாதத்தை பாதுகாக்கவும் எண்ணினர். இதைத்தொடர்ந்து யானையின் கால்களில் பொருத்துவதற்காக பிரத்யேகமாக தயார் செய்யப்பட்ட காலணிகளை பாகனிடம் ஒப்படைத்தனர்.

    இதுதொடர்பாக யானை பாகன் கூறும்போது, இந்த காலணிகள் யானையின் கால்களில் பொருத்தி பயிற்சி அளிக்கப்படும். அதன் பிறகு திருவிழாக்களில் சுவாமி சப்பர வீதி உலாவின்போது யானைக்கு காலணிகள் பொருத்தப்படும் என்றார்.

    ×